MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை

தமிழ்நாடு

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை

Admin
Last updated: மே 24, 2026 9:56 மணி
Admin
Share
SHARE

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் பொருளாதார சுமையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழகப்பா அ. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணய கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் நேரடி தாக்கமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, பொதுமக்கள் பெரும் பொருளாதார சுமையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலகட்டங்களிலும் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பெரிய அளவில் குறைக்கவில்லை. 2023-24 நிதியாண்டில் அரசு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக 2024 நிதியாண்டில் இருந்து தற்போது வரை ஏறக்குறைய 82,000 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் லாபம் அடைந்துள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் முழு சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது வரி மற்றும் விலை நிர்ணயத்தில் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடித்து, பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளின்படி சுமார் 5% வரை திருத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வு போக்குவரத்து செலவினை மேலும் அதிகரித்து, அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கும் என்ற கவலை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறையினரிடையே எழுந்துள்ளது.

ஒருபுறம், தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசும் பாரத பிரதமரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மறுபுறம், பொது போக்குவரத்தில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு தொடர்ந்து அமல்படுத்தப்படுவது, பொது போக்குவரத்து துறையின் செயல்பாட்டு செலவினை அதிகரித்து, அதன் சுமை பொதுமக்கள் மீதும் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது. எனவே, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பேருந்து போன்ற சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விலை மற்றும் சுங்க கட்டணங்களில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅழகப்பா அன்பழகன்எரிபொருள் விலைசுங்கச்சாவடிடீசல்பெட்ரோல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மணிக்கட்டு காயம் வதந்தி: சூர்யகுமார் யாதவ் ஆவேசம்
Next Article திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் – மனிதநேய மக்கள் கட்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சர் மாற்றம்!

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.…

ஜூலை 27, 2026

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான பௌத்த புனிதத்…

ஜூலை 27, 2026

மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் போராட்டத்தின் போது…

ஜூலை 27, 2026

மக்களின் நலனுக்காக செயல்படுங்கள் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரத்தை வெளிப்படுத்துவதை…

ஜூலை 27, 2026

நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு விசாரணை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது…

ஜூலை 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சியில் போதை ஊசியால் இளைஞர் பலி: அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. ஆட்சியில் போதைப்பொருள்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ விழா ரத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறவிருந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்டத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த…

1 Min Read
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு

ரயில்வேயில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை: ரூ.35,400 சம்பளம்!

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் செக்சன் கண்ட்ரோலர் பணி. மாதம் ரூ.35,400 சம்பளம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2026.

2 Min Read
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி மற்றும் கட்சி சின்னம்
தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியிலிருந்து நீக்கிய தவெக

லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை தவெக கட்சியிலிருந்து நீக்கி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?