MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!

அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாக்களித்த அமெரிக்க தமிழர் கைது!

Admin
Last updated: மே 17, 2026 4:30 மணி
Admin
Share
SHARE

வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விதிகளை மீறி வாக்களித்த அமெரிக்க தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தமிழக தேர்தல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து வாக்களித்தனர். இதனால், வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும், வெளிநாட்டு குடியுரிமை பெற்று, இந்திய பாஸ்போர்ட்டை இழந்த பலர் இந்த தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளிநாடுகளுக்குத் திரும்பும் பயணிகளின் கைவிரல்களில் தேர்தல் மை உள்ளதா என சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்று தமிழகத்தில் வாக்களித்த 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர் (64) என்பவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர் அமெரிக்க குடியுரிமை பெற்று, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அவரது கை விரலில் தேர்தல் மை இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கிஷோர் தேர்தல் விதிமுறைகளை மீறி, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சட்டவிரோதமாக வாக்களித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரது துபாய் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவருடன் சேர்த்து, தமிழக தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்து கைதான வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Election FraudForeign voterசட்டவிரோத வாக்களிப்புசென்னை விமான நிலையம்தமிழக தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரவுடிக்கு சலுகை: 3 காவலர்கள் மீது நடவடிக்கை!
Next Article கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

அரசியல்

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா: காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1 Min Read
அரசியல்

திட்டத்தின் பெயரை மாற்றினாலும் சாதனையை அழிக்க முடியாது – ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றினாலும் அதன் சாதனைகளை மக்களிடமிருந்து அழிக்க முடியாது என்றும், இது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல் என்றும்…

1 Min Read
அரசியல்

சேலம்: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு

சேலம் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதில் கார் மூழ்கி, கணவன் மனைவி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை…

1 Min Read
அரசியல்

பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் அறிவித்த இந்த தள்ளுபடி குறித்து விரிவான…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?