MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
தமிழ்நாடு

கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

Admin
Last updated: June 25, 2026 11:51 am
Admin
Share
SHARE

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், அரை நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் புதருக்குள் கிடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால், உடலில் வெளிப்படையான காயங்கள் உள்ளதா என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிவிட்டு யாரையும் கவ்விப் பிடிக்காமல் திரும்பியது. கைவிரல் ரேகை நிபுணர்கள் பெண்ணின் உடலில் தடயங்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். பின்னர், உடற்கூறாய்வுக்காக சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், வழக்கு மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கையில் ‘ஜெகன்’ என்ற பெயரும், அருகே இதய வடிவமும் பச்சை குத்தப்பட்டுள்ளது. மற்றொரு கையில் ‘எஸ்’, ‘ஜெ’ ஆகிய ஆங்கில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeTamil Naduகொலைகோவைபாலியல் பலாத்காரம்பெண் சடலம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: தி.மு.க. முன்னாள் அமைச்சர் பெயர் பயன்படுத்தப்பட்டது
Next Article மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை வெளியீடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண், காதலனுடன் சேர்ந்து…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டாமல் செயல்பட வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை முக்கிய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் சந்தித்து வங்கித் துறை வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்.

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி – காரைக்குடி ரயில் மானாமதுரை வரை நீட்டிப்புக்கு கோரிக்கை

திருச்சியிலிருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் அப்பகுதி மக்களின்…

1 Min Read
தமிழ்நாடு

மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின் தமிழக முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. முதன்முறையாக போட்டியிட்டதால், விஜய் உடன்…

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?