கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மன்னிக்க முடியாத குற்றச் செயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர், "கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றும் முதலமைச்சர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரவும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
