போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் முக்கிய நோக்கம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கு சிறப்பு தனிப்படை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.
வட மாவட்டங்களில் மதுபோதை பழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் இந்த நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், கல்வராயன் மலையில் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு பயிற்சி மைதானம் மற்றும் அதற்கான விடுதி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்தார். இளைஞர்கள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், போதை கலாச்சாரம் பெருமளவில் குறையும் என்றும், போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே முதலமைச்சரின் இலக்கு என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.