முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.
You Might Also Like
அமித் ஷாவை சந்தித்த ஆளுநர் அர்லேகர்: முக்கிய ஆலோசனை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லியில் சந்தித்துப் பேசினார். இரு மாநில நிர்வாகச் சிக்கல்கள், துணைவேந்தர்…
1 Min Read
தவெகவில் அதிமுகவினர்: செங்கோட்டையன் விளக்கம்
அதிமுக தலைமை மீது அதிருப்தி கொண்ட பல தொண்டர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
1 Min Read
சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 232 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவி ஏற்றனர். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது.…
0 Min Read
கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு வேல்முருகன் எதிர்ப்பு
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என…
1 Min Read

