முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.
You Might Also Like
மருத்துவ சீட்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
2 முதல் 3 கோடி ரூபாய் கொடுத்து மருத்துவ சீட் பெறுபவர்கள் கத்திரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு சென்றுவிடுவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…
1 Min Read
சிவகாசி வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
1 Min Read
செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்: குதிரை பேர வழக்கு பின்னணி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, குதிரை பேர வழக்கு நிபந்தனையின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில்,…
1 Min Read
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா: தேனி மாவட்டத்துக்கு 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை
தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேனி அருகே வீரபாண்டியில் அமைந்துள்ள கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை…
1 Min Read

