பேருந்தில் செல்ல வேண்டும்: முதல்வர் விஜய்யின் கனவு நனவானது – நடத்துனர் நெகிழ்ச்சி

முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version