முதல்வரும் 300 பேருந்துகளும்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னையில் புதிதாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், நிகழ்ச்சி நடைபெறாததால் மூன்று நாட்களாக இந்த பேருந்துகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால், பேருந்துகளை இயக்க வந்த 900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூன்று நாட்கள் உணவு மற்றும் இருப்பிட வசதி இன்றி சிரமப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'ஏற்கனவே தாமதமான நிகழ்ச்சியை விரைந்து முடிக்காமல், முதல்வர் பேருந்தில் ஏறி வீடியோ எடுக்க, சுமார் 30 நிமிடங்கள் கடற்கரை சாலையில் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டனர். இது கண்டிக்கத்தக்கது' என தெரிவித்துள்ளார்.

'ஏன் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?' என்று ஒருவர் காவலரிடம் கேட்டது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த கேள்வி காவலருக்கானது மட்டுமல்ல, முதல்வருக்கானதும் கூட என ஜெயக்குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version