முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.
You Might Also Like
100 நாட்களில் 546 குற்றங்கள்: திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மாநிலத்தில் 546-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு…
1 Min Read
தமிழகத்தில் ஓராண்டுக்குள் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடக்கம்
தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என சென்னை தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். புதிய 'பி.எஸ்.என்.எல். செல்ப்கேர்' செயலியும் வெளியிடப்பட்டுள்ளது.
1 Min Read
டெல்லியில் வன்முறை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: தவெக
டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட மோதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
2 Min Read
போதை இல்லா தமிழகம்: விளையாட்டு அறிவியல் கல்விக்கு அரசு நடவடிக்கை!
போதை இல்லா தமிழகம்: பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான விளையாட்டு கல்வியை வழங்க நடவடிக்கை. தேசிய, உலக போட்டிகளில் பங்கேற்போருக்கு…
2 Min Read
