சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 232 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவி ஏற்றனர்.

இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக நாளை சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகராக முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடைபெறும். இல்லையென்றால் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார்.

சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவங்களை பேரவை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் வழங்கினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version