சென்னையில் நாளை (26.05.2026) மின் விநியோகத்தில் தற்காலிக தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மின் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக இந்த தடை அமல்படுத்தப்படும். பணிகள் நிறைவடைந்தவுடன், மதியம் 2:00 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
தி.நகர் பகுதியில் பஜூல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலைஅம்மாள் தெரு, ஹபீபுல்லா சாலை, ரங்கன் தெரு, துரைசாமி சாலை, ராஜன் தெரு, அருளாம்பாள் தெரு, காந்தி தெரு, ஜவஹர்லால் நேரு தெரு, ராமச்சந்திர ஐயர் தெரு, ராஜபிள்ளை தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம், அஜீஸ் நகர், அக்பராபாத், பராங்குசபுரம், சிஆர்பி கார்டன், மங்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை, பாரதி தெரு, மற்றும் திலக் தெரு ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.
மேலும், தசரதபுரம், சாலிகிராமம், கே.கே. நகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், திருவேற்காடு, மற்றும் ஐயப்பன்தாங்கல் போன்ற பகுதிகளிலும் மின்தடை நீடிக்கும். தசரதபுரத்தில் காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், வெங்கடேச நகர், அருணாசலம் சாலை ஆகிய இடங்களிலும், சாலிகிராமத்தில் குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கே.கே. நகரில் பரணி காலனி, காவேரி மருத்துவமனை, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலை, என்.எஸ்.கே. லேன், ஷ்யாமளா டவர் ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும். சின்மயா நகரில் முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, விநாயகம் தெரு, காமராஜர் சாலை, திருவேற்காட்டில் ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர், மற்றும் ஐயப்பன்தாங்கலில் மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைபடும். பொதுமக்கள் இந்த தற்காலிக மின்தடைக்கு ஒத்துழைக்குமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.