MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் மீத்தேன் வாயு கசிவு: கட்டுமானப் பணியால் பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் மீத்தேன் வாயு கசிவு: கட்டுமானப் பணியால் பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னையில் மீத்தேன் வாயு கசிவு: கட்டுமானப் பணியால் பரபரப்பு

லைஃப் ஸ்டைல்

சென்னையில் மீத்தேன் வாயு கசிவு: கட்டுமானப் பணியால் பரபரப்பு

Admin
Last updated: ஜூன் 23, 2026 6:53 காலை
Admin
Share
SHARE

சென்னையின் மணலி பகுதியில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளின் போது மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக, ராட்சத ட்ரில்லிங் இயந்திரம் மூலம் தரையை துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டிருந்த மீத்தேன் வாயு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதிக அழுத்தத்துடன் வாயு வெளியேறத் தொடங்கியது.

இந்த திடீர் வாயு கசிவால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். முக்கிய சாலை சந்திப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அப்பகுதி மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகனாந்தம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மணலை நிரப்பியும் வாயு கசிவை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், வாயுவின் அழுத்தம் குறையாததால், கசிவு தொடர்ந்தது.

தகவலறிந்த குழாய் பதிப்பு நிறுவனம், வாயு வெளியேறும் பிரதான வால்வை அடைத்ததன் மூலம், கசிவின் அளவு படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. மணலி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீஞ்சூர், கொண்டக்கரையில் இருந்து கோயம்பேடு வரை நிலத்திற்கடியில் ‘டொராண்டோ’ என்ற பெயரில் மீத்தேன் இயற்கை வாயு குழாய் புதைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வாயு கசிவு ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிந்து பலர் உயிரிழந்த நிலையில், மணலியில் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiMethane Gas Leakசென்னைதமிழ்நாடு செய்திகள்பேருந்து நிலையம்மணலிமீத்தேன் வாயு கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காங்கிரஸ் தலைவர் மாற்றம்: யார் அந்த மூத்த தலைவர்?
Next Article கிராம்பு பொடி: நோய்களை விரட்டும் அற்புத மருந்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் தே.மு.தி.க. எம்.பி. எல்.கே.சுதீஷ் சந்திப்பு

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் திறப்பு: மத்திய மந்திரி உறுதி

வேலூர் விமான நிலையம் அடுத்த 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய…

ஆகஸ்ட் 8, 2026

அமித் ஷாவின் பெயரை கேட்டால் பயங்கரவாதிகளே நடுங்குவர்: கிரண் ரிஜிஜூ

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 'அமித் ஷாவின்…

ஆகஸ்ட் 8, 2026

உயரமான மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த வாலிபர்

சென்னையில், உயரமான மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர்…

ஆகஸ்ட் 7, 2026

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த…

ஆகஸ்ட் 7, 2026

விரைவுச்சாலையை உலர்த்த டேபிள் ஃபேன்: உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ-கான்பூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட 2 வாரங்களில்…

ஆகஸ்ட் 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தயிர்: ஆரோக்கிய நன்மைகள்

நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற ஆரோக்கிய உணவுகளில் ஒன்றான தயிர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையைப் பாதுகாத்து, மனநலத்தையும் மேம்படுத்துகிறது. இதன் நன்மைகளை அறிந்து அன்றாடம்…

1 Min Read
பப்பாளி இலைச்சாறுடன் ஒருவர்
லைஃப் ஸ்டைல்

கல்லீரலை சுத்தப்படுத்தும் பப்பாளி இலைச்சாறு: டெங்கு, மலேரியாவுக்கு நிவாரணம்

டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் பப்பாளி இலைச்சாறு, கல்லீரலை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. இரத்த பிளேட்லெட்டுகளை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது அதிமுகவில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?