பொதுவாக சிலர் கழிவறைக்குச் செல்லும்போது கையில் செல்போனை எடுத்துச் செல்வதுண்டு. ஆனால், இப்படி செல்போனை கழிவறைக்கு கொண்டு செல்வதால் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கழிவறையில் உள்ள பாக்டீரியாக்கள் செல்போனில் தொற்றிக்கொண்டு, அதன் மூலம் நம் உடலில் பரவி வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
கழிவறைக்கு எடுத்துச் செல்லும் செல்போன்கள் பெரும்பாலும் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால், அங்குள்ள கிருமிகள் எளிதாக போனில் ஒட்டிக்கொள்கின்றன. மருத்துவர்களின் ஆய்வின்படி, நாம் அன்றாடம் கழிவறைக்கு எடுத்துச்செல்லும் செல்போனில், சாதாரணமான செல்போன்களை விட 10 மடங்கு அதிகமான கிருமிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிருமிகள் நம் உடலில் சென்றால், அது விஷமாக மாறி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
மேலும், செல்போனை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பது, மலம் கழிக்க முடியாமல் போவதற்கும், ஆசனவாய் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். எனவே, நமது ஆரோக்கியத்தை பேணிக்காக்க, முடிந்தவரை செல்போனை கழிவறைக்கு எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.
செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற எண்ணத்தைத் தவிர்த்து, வேறு வேலைகளில் கவனத்தைச் செலுத்தினால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். உங்கள் கவனத்தை திசைதிருப்புவதன் மூலம், செல்போன் பயன்பாட்டைக் குறைத்து, நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.