MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விலைவாசி உயர்வு & தட்டுப்பாடு: பிரேமலதா கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விலைவாசி உயர்வு & தட்டுப்பாடு: பிரேமலதா கண்டனம்!
தமிழ்நாடு

விலைவாசி உயர்வு & தட்டுப்பாடு: பிரேமலதா கண்டனம்!

Admin
Last updated: May 16, 2026 11:29 am
Admin
Share
SHARE

தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் விலை உயர்வு, மறுபக்கம் டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை நீடித்தால், மக்களின் இயல்பான வாழ்க்கை முறையும், அன்றாட வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு 'லாக்டவுன்' போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பது உறுதி என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் உள்ளனர்.

'உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி' என்ற பழமொழிக்கிணங்க, ஒரு பக்கம் விலைவாசி உயர்வு மற்றும் மற்றொரு பக்கம் தட்டுப்பாடு ஆகிய இரட்டை சுமைகள் மக்களின் வாழ்வை பெரிதும் சிரமப்படுத்தி வருகின்றன. இந்த நிலை மக்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டையும் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அன்றாட தேவைகள் பாதிக்கப்படாத வகையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் மீது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சுமையை நிரந்தரமாக குறைக்கும் வகையில் அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Newsஎரிபொருள் தட்டுப்பாடுடீசல் விலைதேமுதிகபிரேமலதா விஜயகாந்த்பெட்ரோல் விலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மோடி அரசு பணிந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Next Article நீட் தேர்வை ரத்து செய்! – திருமாவளவன் ஆவேச அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத்தில் வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவியையும் மைனர் மகளையும் பாலியல் உறவுக்கு…

May 17, 2026

விஜய்யுடன் ஒப்பிடுவதா? மனம் நொந்த பவன் கல்யாண் – பழமொழி சொன்னsplit

நடிகர் விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது குறித்து…

May 17, 2026

டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய அதிரடி…

May 16, 2026

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!

மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

May 16, 2026

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி – ஊழியர்கள் வீரத்தால் தவிடுபொடி!

நாசிக்கில் நகைக்கடையை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றபோது,…

May 16, 2026

You Might Also Like

தமிழ்நாடு

TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு…

1 Min Read
தமிழ்நாடு

சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய் இன்று காலை சட்டமன்றத்தில் முதல் உரை ஆற்றிய நிலையில், சாலைகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்

தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை. சி.வி. சண்முக

1 Min Read
தமிழ்நாடு

‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம். இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?