MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்

லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்: அண்ணாமலையுடன் இணைந்தனர்

Admin
Last updated: ஜூன் 6, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

கோவையில் பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் கே.வசந்தராஜன், தனது 28 ஆண்டு கால பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் இந்த சூழலில், வசந்தராஜன் பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலை உடன் இணைந்து பயணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், '1998ல் கிளை தலைவராக பாஜகவில் எனது அரசியல் பயணத்தை தொடங்கி, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர், மாவட்ட தலைவர், பாராளுமன்ற வேட்பாளர் என பல நிலைகளில் என்னை உயர்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 28 ஆண்டுகளாக தாமரையுடன் வாழ்ந்திருக்கிறேன். வாஜ்பாய், அத்வானி, மோடி போன்ற தலைவர்களின் தலைமையில் பாஜகவில் பயணித்தது எனது பூர்வ ஜென்ம புண்ணியம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, போதைக்கு அடிமை போன்ற பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது சமூகப் பயணம். ஆனால், தற்போதைய தமிழக பாஜக சூழலில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிட்டேன். கட்சிக்காக பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அனைவரையும் தலைவர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே எனது ஆவல். கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன், தேசிய சிந்தனை, ஊழலற்ற நேர்மையான வளர்ச்சி ஆகியவற்றை எதிர்பார்க்கும் அரசியல் பாதையில் அண்ணாமலை அண்ணனுடன் இணைந்து பயணிக்க எனது அரசியல் நண்பர்களுடன் முடிவு செய்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் பாஜக தலைவரான வேதசுப்பிரமணியமும் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த இவர், 1998 முதல் 28 ஆண்டுகளாக பாஜகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக செயல்பட்ட இவர், பின்னர் தாம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவரும் அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி, அண்ணாமலையுடன் இணைவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnamalaiBJPTamil Nadu Politicsஅண்ணாமலைதமிழ்நாடு அரசியல்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!
Next Article சனிக்கிழமை எண்ணெய் குளியல்: வெறும் பழக்கமல்ல, ஆன்மீக ரகசியம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

15 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்

தமிழகத்தில் காலை உணவு திட்டம் மேலும் 15 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளபடி, செப்டம்பர் 17 முதல் 6-8 வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

1 Min Read
தமிழ்நாடு

மீண்டும் தேர்தல் வந்தால் தவெக 200+ இடங்களில் வெல்லும்: ஜோதிமணி

மீண்டும் தேர்தல் வந்தால் த.வெ.க. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், தற்போதைய ஆட்சி ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற ஆட்சியாகும் என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சபரிமலை நெய் ஊழல்: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அபிஷேக நெய் விற்பனையில் 17 லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில், கேரள உயர்நீதிமன்றம் இன்று அவசர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 4…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வீட்டிலிருந்தே தைராய்டு கோளாறை கண்டறியும் எளிய வழிகள்!

பெண்களிடையே பரவலாகக் காணப்படும் தைராய்டு கோளாறை வீட்டிலிருந்தே கண்டறிய எளிய வழிகள் உள்ளன. கழுத்துப் பகுதியை சோதித்துப் பார்ப்பது துல்லியமான முறையாகும். தடிப்புகள், கட்டிகள் உள்ளதா என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?