மீண்டும் தேர்தல் நடைபெற்றால், த.வெ.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
த.வெ.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, 'த.வெ.க. அரசுக்கு எங்கள் ஆதரவை ஆலோசனைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தினோம். தற்போது ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக முதல்வர் விஜய்க்கு நாங்கள் பாராட்டு தெரிவித்தோம். அனைவரையும் ஒருங்கிணைப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆட்சி கவிழ்ப்பு போன்ற முயற்சிகளில் யாரும் ஈடுபடக் கூடாது, அது தவறான செயல்' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'மீண்டும் தேர்தல் வந்தால் த.வெ.க. 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும். த.வெ.க.வினர் மற்ற கட்சித் தலைவர்கள் சொல்வதைக் காது கொடுத்து கேட்கின்றனர். மற்ற கட்சிகளைப் போல் அவர்கள் சங்கடப்படுவதில்லை. நாங்கள் த.வெ.க.வுடன் இணைந்து பயணிப்போம். இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள்' என்றார்.
தற்போதைய த.வெ.க. அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய ஜோதிமணி, ஊழலற்ற, வெளிப்படையான, மதச்சார்பற்ற ஆட்சிக்கு முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். கூட்டணி கட்சிகளின் கருத்துக்களுக்கு த.வெ.க. மதிப்பளிப்பதாகவும், இது மற்ற கட்சிகளிடமிருந்து வேறுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் தேர்தல்களில் த.வெ.க. கூட்டணி பெரும் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.