MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு
அரசியல்

பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு

Admin
Last updated: June 21, 2026 2:07 pm
Admin
Share
SHARE

சனிக்கிழமைதோறும் பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிற்பதை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு. சில சமயங்களில், கொள்கை முரண்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் காரணமாக சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி மற்றொரு கட்சியில் இணைவதும் சகஜம்தான். ஆனால், சமீப காலமாக சனிக்கிழமைதோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் பனையூர் பங்களா கேட் முன் நிற்பதை பார்க்கும்போது, ஜவுளிக் கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போல காட்சியளிக்கிறது.

பனையூர் பங்களா கேட் திறந்ததும், புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து ஓடும் ரசிகர்களைப் போல் சென்றாலும், அங்கு கட்சித் தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ சிலர் கொடுக்கும் கட்சித் துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர். தொண்டனின் நலன்களிலும், துன்பங்களிலும் இயக்கத் தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால், கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர் இறந்ததைக்கூட திரும்பிப் பார்க்காத ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்க்கும்போது, ‘இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புறாங்க’ என்ற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅப்பாவுஅரசியல்பனையூர் கேட்முன்னாள் அமைச்சர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 11 பந்தில் அரை சதம்: சூர்யவன்ஷி அசத்தல் சாதனை!
Next Article சர்வதேச யோகா தினம்: முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருங்கால கட்டமைப்புக்கு சுயசார்பு அவசியம்: பிரதமர் மோடி

எதிர்கால உள்கட்டமைப்பிற்கு சுயசார்பு மிகவும் இன்றியமையாதது என்று பிரதமர் மோடி தனது உரையில்…

June 21, 2026

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

You Might Also Like

இந்தியா

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா, காங்கிரஸ் மேலிடம் வழங்கிய ராஜ்யசபா வாய்ப்பை நிராகரித்து, மாநில அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

விவசாயிகளின் கடன் வசூல் நிறுத்தம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, வேளாண் கூட்டுறவு கடன் வசூல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
அரசியல்

செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்

காரைக்குடி மாநகராட்சியில் செய்யாத பணிக்காக ரூ.15.80 லட்சம் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் பாண்டி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திரிணாமுல் காங்கிரஸ் பிளவு: 64 எம்எல்ஏக்கள் கிளர்ச்சி, சின்ஹா மம்தாவுக்கு ஆதரவு

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸில் பிளவு. 64 எம்எல்ஏக்கள் கிளர்ச்சி, 20 எம்பிக்கள் என்டிஏவுக்கு ஆதரவு. சத்ருஹன் சின்ஹா மம்தாவுக்கு ஆதரவு உறுதி.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?