ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உகாண்டா, காங்கோ, சூடான் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், உடலின் முக்கிய உறுப்புகளை கடுமையாக தாக்கும் தன்மை கொண்டது.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் எபோலா வைரஸின் கொடூர தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால், நோயை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அது மற்ற நாடுகளுக்கும் பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்தியர்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. குறிப்பாக, காங்கோ, உகாண்டா, சூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
