MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்

அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்

Admin
Last updated: மே 25, 2026 9:26 மணி
Admin
Share
SHARE

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார். மதுராந்தகம் (தனி) தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் (தனி) தொகுதி எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

இது குறித்து பேரவைத் தலைவர் பிரபாகர் கூறுகையில், 'ஒரு உறுப்பினர் பதவி விலகும்போது அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. உறுப்பினர் தானாக முன்வந்து ராஜினாமா கடிதம் அளிக்கும்போது, அது முறையாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதே எனது பணி. பேரவை விதி 21-ன்படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர் தனது எண்ணத்தை கைப்பட எழுதி தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்துள்ளதால், ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். மேலும், பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து விதிகளின்படி முடிவெடுப்பதாகவும் அவர் கூறினார்.

ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மூன்று எம்எல்ஏக்களும் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உடனடியாக தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏக்கள், மன்னிப்பு கடிதம் அளித்து பழனிசாமி அணியில் இணைந்தனர். இதன் மூலம், பழனிசாமி அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆகவும், சி.வி.சண்முகம் அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆகவும் குறைந்துள்ளது.

முன்னதாக, முதல்வர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது இந்த மூன்று எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்திருந்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஎம்எல்ஏக்கள்தமிழக அரசியல்தவெகராஜினாமா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
Next Article விவசாய கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மக்கள் தீர்ப்பை ஏற்க தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அறிவுரை

மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, தி.மு.க. ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டாட்சி தத்துவத்தை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் மின்வெட்டு பிரச்சனைகள்…

1 Min Read
தமிழ்நாடு

ஆட்சி மாறினாலும் ஆபத்து தொடர்கிறது: எடப்பாடி ஆவேசம்!

சென்னை முடிச்சூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

எடப்பாடியை மறைமுகமாக விமர்சித்த சி.விஜயபாஸ்கர்: உண்மையான பயணம் சாத்தியமா?

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொண்டர்களின் மனதை வெல்லாத தலைமை மக்களின் மனதை வெல்லாது என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?