MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அரசியல்

தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Admin
Last updated: May 17, 2026 9:00 am
Admin
Share
SHARE

சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நேரத்தில் திமுகவினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 23 அன்று நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டையில் திமுகவினர் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவெகவைச் சேர்ந்த ரதி, அவரது கணவர் பாஸ்கர், மகன் சூர்யா, கணவரின் தம்பி காந்தி மற்றும் தனுஷ், வாசுதேவன், கவுதமன், விக்னேஷ் ஆகிய 8 பேர் அங்கு வந்து திமுகவினரை தாக்கி, மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த கே.வி.மோகன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தவெகவைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன், 'ஏற்கனவே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது மனுதாரர் புகார் அளித்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் திமுகவினர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை ஆராயாமல் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளார். மனுதாரர்கள் மீது இதற்கு முன்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதால் அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார். போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பாலாஜி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.தனபால், மனுதாரர்கள் ஏற்கனவே திமுகவினர் மீது புகார் அளித்திருப்பதும், அவர்களும் இவர்கள் மீது புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தேர்தல் பணி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் 8 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர்கள் அனைவரும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சொந்த ஜாமீன் மற்றும் அதே மதிப்பில் இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், 4 வாரங்களுக்கு சனிக்கிழமைதோறும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என நீதிபதி முக்கிய நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:DMKHigh CourtTamil Nadu Newsஅரசியல்தவெகமுன்ஜாமீன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!
Next Article கிருஷ்ணகிரி: ஏரியில் 20 டன் மீன்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விஜய் உடன் ஒப்பீடா? – பவன் கல்யாண் விளக்கம்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது அரசியல் பயணம் தமிழக முதல்வர்…

May 17, 2026

வெள்ளி இறக்குமதிக்கு கட்டுப்பாடு: விலை உயருமா?

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய…

May 17, 2026

குறுகிய கால ஹஜ் யாத்திரை: மத்திய அரசின் புதிய திட்டம் அறிமுகம்!

தொழில் செய்பவர்கள் நீண்ட நாட்கள் பயணிக்க முடியாத…

May 17, 2026

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்பு: ஜூன் 25 முதல் சிறப்புப் பணி!

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 25…

May 17, 2026

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின்…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா? – ரஜினியின் பளீச் பதில்!

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நட்பு அரசியலைத் தாண்டியது என்றும், விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

1 Min Read
அரசியல்

ஈரோடு: 50 அடி உயரத்தில் ரயில் இன்ஜின் விழுந்து விபத்து – அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மின்சார ரயில் பணிமனையில் கிரேன் உடைந்து 80 டன் எடை கொண்ட ரயில் இன்ஜின் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஊழியர்கள் முறையான…

1 Min Read
தமிழ்நாடு

வீட்டில் கஞ்சா வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: பரபரப்பு!

சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு இலக்குக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் நடப்பது விமர்சனங்களை…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் பிரதமர், அஜித் முதல்வர் ஆவாரா? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணிப்பு!

பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட், நடிகர் விஜய் பிரதமர் ஆகவும், அஜித் முதலமைச்சர் ஆகவும் யோகம் உள்ளதாகக் கணித்துள்ளார். 2029-ல் மோடிக்கு மாற்று இவர் என்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?