MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

தமிழ்நாடு

நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

Admin
Last updated: ஜூலை 3, 2026 7:39 காலை
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும், மற்றொரு மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதும் நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு இன்று சமூக விரோதிகளின் கொலைப்பசிக்கு ஆளாகி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி சம்பவங்கள், முன்விரோத சம்பவங்களால் இரத்த ஆறு ஓடுவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமோர் ரத்த சாட்சி என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியப் போக்கால் தென்மாவட்டங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இடங்களாக உருவாகியிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் இத்தனை கொலைகள், குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டு சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்த வேண்டிய முதல்வர், அதனை விட்டுவிட்டு தனது கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். "அந்தச் சிறுவர்களின் மரண ஓலங்கள் உங்கள் காதுகளில் விழவில்லையா முதல்வர் விஜய்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈவு இரக்கமற்ற முறையில் இத்தகைய படுபாதகச் செயலைப் புரிந்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர காவல்துறையை வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சட்டம் ஒழுங்குதமிழக அரசியல்தவெக அரசுநெல்லை இரட்டை கொலைவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
Next Article மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க இபிஎஸ் திட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி

3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில் வசிக்கும் கன்னடர்களே என அம்மாநில…

ஆகஸ்ட் 18, 2026

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகளுக்கு…

ஆகஸ்ட் 18, 2026

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

புதிய மாப்பிள்ளைக்கு 100 வகை சிற்றுண்டிகள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தில், புதிய…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

யோகா தனிமனித வளர்ச்சிக்கு வழிகாட்டும் – ஆளுநர் அர்லேகர்

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், யோகா தனிமனித வளர்ச்சிக்கும் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.

1 Min Read
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜய் தான் காரணம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

விவசாயிகளின் அவல நிலைக்கு 'டம்மி முதலமைச்சர்' விஜய் காரணம் - தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு. மேகதாது அணை விவகாரத்திலும் அரசு மெத்தனம் என விமர்சனம்.

2 Min Read
தமிழ்நாடு

கூடலூர் காபி தோட்டத்தில் காட்டு யானை உயிரிழப்பு

கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து இறந்த காட்டு யானை. மின் மோட்டார், வயர்கள் அருகே இருந்ததால் மின்சாரம் தாக்கி இறந்ததா என விசாரணை.

1 Min Read
அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சுற்றுச்சூழல் மாநாடு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஜூலை 26ல் திருச்செந்தூரில் அண்ணாமலை சுற்றுச்சூழல் மாநாடு

தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு, அடுத்ததாக சுற்றுச்சூழல் கருத்தாக்கத்துடன் திருச்செந்தூரில் ஜூலை 26ல் மாநாடு நடத்துகிறது. இதற்கான…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?