MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

Admin
Last updated: மே 10, 2026 10:26 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். ஆனால் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன் த.வெ.க. அரசு தனது பயணத்தை தொடங்கிவிட முடியாது. 2 முக்கிய கட்டங்களை கடந்த பிறகுதான் ஆட்சியை தொடங்க முடியும்.

த.வெ.க. அரசு 13-ந் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் உடனடியாக சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டும். சபாநாயகர் ஒருவரை அரசு முன்மொழிந்த பிறகு, அவருக்கு எதிராக வேறொரு வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால், போட்டி நிலவும். அப்போது எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் சபாநாயகராக அறிவிக்கப்படுவார்.

போட்டியில்லாவிட்டால், அரசால் அறிவிக்கப்பட்ட சபாநாயகரின் இரு கைகளையும் முதல்-அமைச்சர் விஜயும், எதிர்க்கட்சித் தலைவரும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து அன்றோ அல்லது மற்றொரு நாளிலோ (13-ந் தேதிக்குள்) அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிய, அதன் மீது முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றி அனைவரது நம்பிக்கையையும் கோருவார். அதில் எதிர்க்கட்சியினரும் உரையாற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு விடப்படும். எதிர்க்கட்சியினர், எண்ணிக் கணிக்கும் டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று கேட்டால், அந்த வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட வேண்டும். அவைக்கு வெளியே எம்.எல்.ஏ.க்கள் சென்றிருந்தால் அவர்களை அவைக்குள் வரச் செய்வதற்கான மணியோசை 3 முறை ஒலிக்கப்படும்.

அதன் பின்னர் அவையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்படும். பின்னர் சட்டசபை செயலாளர், டிவிஷன் வாக்கெடுப்பை நடத்துவார். ஒவ்வொரு டிவிஷனிலும் உள்ள (மொத்தம் 6 டிவிஷன்) எம்.எல்.ஏ.க்களிடம் சட்டசபை செயலாளர், தீர்மானத்தை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் தனித்தனியாக எழுந்து நிற்கக் கூறுவார். (முதல்-அமைச்சர் முதல் டிவிஷனில் இருப்பார், அவருக்கு நேர் எதிரேயுள்ள 6-ம் டிவிஷனில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்).

அந்த வகையில், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக் கையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்றுவிட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும்.

பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். அரசுக்கு தேவையான பெரும்பான்மை ஒன்றிரண்டு ஒட்டுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆளும் கட்சி மற்றும் கூட்ட ணிக் கட்சிகளின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அன்று தவறாமல் வாக்கெடுப்புக்காக அவைக்கு வருவது மிகமிக அவசியமாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து- சீமான்
Next Article சென்னை: வங்கியில் போலி நகையை அடகு வைத்த 2 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்டியாலாவில் தம்பதியரை தாக்கிய பிட்புல் நாய்

பாட்டியாலாவில் தம்பதியரை தாக்கிய பிட்புல்: அதிர்ச்சி சிசிடிவி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதியினர் மீது பிட்புல்…

ஆகஸ்ட் 13, 2026

ஒடிசாவில் ரெட் அலர்ட்: கனமழை, புயல் காற்று எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால், ஒடிசா…

ஆகஸ்ட் 13, 2026

உ.பி. முசாபர்நகர் கலவர வழக்கு: 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற அனுமதி

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் 2013 கலவரம் தொடர்பாக…

ஆகஸ்ட் 13, 2026

டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு அல்-காய்தா காரணம்: ஐநா பாதுகாப்பு சபை

டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு இந்திய துணைக்கண்டத்துக்கான அல்-காய்தா…

ஆகஸ்ட் 13, 2026

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு

அகஸ்தியர் அருவி: 10 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த பின் அருவி திறக்கப்படும்.

1 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய் மௌன புரட்சி செய்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதை…

1 Min Read
முதலமைச்சர் விஜய் 'வெற்றித்தறி' விற்பனை நிலையத்தை திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு

நாளை ‘வெற்றித்தறி’ விற்பனை நிலையத்தை விஜய் தொடங்கிவைக்கிறார்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் மற்றும் புதிய மின் வணிகத்தளத்தை நாளை (ஆகஸ்ட் 7) முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க…

1 Min Read
தமிழக அரசு மதுக்கூட விதிமுறைகளில் தளர்வு குறித்த அரசாணை
தமிழ்நாடு

மதுக்கூட விதிமுறைகளில் தளர்வு: தமிழக அரசு ஆணை வெளியீடு

மதுக்கூடங்கள் அமைப்பதற்கான விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. மதுக்கடையிலிருந்து 100 மீட்டருக்குள் மதுக்கூடம் அமைக்கலாம், இடப்பரப்பளவு 20 சதுர மீட்டராக உயர்வு.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?