MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

தமிழ்நாடு

நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

Admin
Last updated: ஜூலை 3, 2026 7:39 காலை
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும், மற்றொரு மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதும் நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு இன்று சமூக விரோதிகளின் கொலைப்பசிக்கு ஆளாகி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி சம்பவங்கள், முன்விரோத சம்பவங்களால் இரத்த ஆறு ஓடுவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமோர் ரத்த சாட்சி என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியப் போக்கால் தென்மாவட்டங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இடங்களாக உருவாகியிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் இத்தனை கொலைகள், குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டு சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்த வேண்டிய முதல்வர், அதனை விட்டுவிட்டு தனது கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். "அந்தச் சிறுவர்களின் மரண ஓலங்கள் உங்கள் காதுகளில் விழவில்லையா முதல்வர் விஜய்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈவு இரக்கமற்ற முறையில் இத்தகைய படுபாதகச் செயலைப் புரிந்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர காவல்துறையை வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சட்டம் ஒழுங்குதமிழக அரசியல்தவெக அரசுநெல்லை இரட்டை கொலைவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
Next Article மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க இபிஎஸ் திட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

துப்பாக்கியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் சவுரப் அகிர்​வார்

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட டாக்ஸி ஓட்டுநர் சவுரப் அகிர்​வார்…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

புதிய மாப்பிள்ளைக்கு 100 வகை சிற்றுண்டிகள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தில், புதிய…

ஆகஸ்ட் 18, 2026

ஜார்கண்ட் தேர்வு ரத்து: மாணவர்கள் வரவேற்பு – சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை

ஜார்கண்ட் அரசுத் தேர்வு கேள்வித்தாள் கசிந்ததால் ரத்து…

ஆகஸ்ட் 18, 2026

மராட்டியத்தில் 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்: பேராசிரியர் எச்சரிக்கை

மராட்டியத்தில் கடந்த 16 நாட்களில் 29 நிலநடுக்கங்கள்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர்
தமிழ்நாடு

திரிபுரா டிஜிபி அனுராக் தங்கர் மர்ம மரணம்: அதிர்ச்சியில் பாஜக ஆளும் மாநிலம்

திரிபுரா மாநில காவல்துறை இயக்குநர் அனுராக் தங்கர், தனது அலுவலகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். பாஜக ஆளும் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விரிவான…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தெற்கு ஆந்திராவில் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என…

1 Min Read
மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட செய்தி
தமிழ்நாடு

மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் மகிளா கோர்ட், மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2 Min Read
தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?