திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளிமுத்து என்பவர் தனது மூத்த மகன் சின்னராஜ் (12) மற்றும் இளைய மகன் ஜெயராஜ் (5) ஆகியோருடன் நெல்லிக்காய் பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் காரில் வந்து காளிமுத்துவின் வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், காளிமுத்துவின் தலையை மட்டும் நெடுஞ்சாலையின் நடுவே வைத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது. இந்த கொடூர சம்பவத்தில் 5 வயது சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், மூத்த மகன் சின்னதுரை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் பாண்டியன் என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக காளிமுத்து சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது, காளிமுத்துவின் தலையை அறுத்து எடுத்துச் சென்ற கும்பல், மூலச்சி ஊருக்குள் வைத்துச் சென்றது. இந்த கொடூர கொலை கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
You Might Also Like
கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
கோவை அருகே காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ்…
1 Min Read
பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
போதைக்கு அடிமையான பேரன், பணம் கேட்டு தகராறு செய்ததில் தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளார்.
2 Min Read
ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு: அதிர்ச்சியில் மக்கள்
ராமநாதபுரத்தில் வீட்டு திண்ணையில் தூங்கிய 5 வயது சிறுமி, பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்…
1 Min Read