முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். முருங்கை இலை முதல் பூ வரை பல நோய்களை குணப்படுத்தும் அதன் ஆரோக்கிய நன்மைகளை விரிவாகக் காண்போம்.
முருங்கை கீரையை பொரியல் அல்லது சூப் செய்து சாப்பிடுவதால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும், இது மலச்சிக்கலைப் போக்கி, இளநரையைப் போக்கி, கண் பார்வைத்திறனை அதிகரிக்கும். முருங்கை கீரை முடி உதிர்வதைத் தடுப்பதுடன், ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். இது நினைவாற்றலை அதிகரித்து, நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகளையும் குணப்படுத்தும்.
முருங்கை காயில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப் புண் போன்ற நோய்களை குணமாக்கும். கண் சம்பந்தமான நோய்கள், மூட்டு வலியை குணமாக்குவதுடன், எலும்பு மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்தி, தாது உற்பத்தியை அதிகரிக்கும்.
முருங்கை விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வாதம், முடக்கு வாதம், இளம்பிள்ளை வாதம் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. முருங்கை பிசினை நல்லெண்ணெயில் கலந்து காதில் இரண்டு சொட்டு விட்டால் காது வலி நீங்கும். முருங்கை வேரின் சாறுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் ஆஸ்துமா, வாதம், முதுகு வலி போன்றவை குணமாகும்.