தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஸ்டைலான டிசைன்களில் சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் வடிவமைப்பை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல வண்ணங்களில், புதிய மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் சைக்கிள்களை வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலேயே புதிய டிசைன் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. தரமானதாகவும், மாணவர்களைக் கவரும் வகையிலும் சைக்கிள்கள் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு நிதியுதவி பெறும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பிரதீப் குமார், சைக்கிள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
You Might Also Like
முதல்-அமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வு: அண்டை மாநிலங்களும் ஈர்ப்பு!
நடிகர் விஜய், திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து, அண்டை மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். மக்கள் அவரை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
2 Min Read
வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களை கைது செய்த போலீஸ் – பரபரப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில், வகுப்பறைக்குள் புகுந்து எஸ்.எப்.ஐ. அமைப்பின் இரு மாணவர் தலைவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு…
1 Min Read
கடல்சார் ஏற்றுமதி மண்டலம்: மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
தமிழகத்திற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் திட்டத்தை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
0 Min Read
முதல்-அமைச்சர் விஜய்: மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
முதல்-அமைச்சர் விஜய், டிரைவர் இல்லாமல் இயங்கும் நவீன மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
2 Min Read
