தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி ஸ்டைலான டிசைன்களில் சைக்கிள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களின் வடிவமைப்பை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல வண்ணங்களில், புதிய மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் சைக்கிள்களை வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டிலேயே புதிய டிசைன் சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. தரமானதாகவும், மாணவர்களைக் கவரும் வகையிலும் சைக்கிள்கள் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் அரசு நிதியுதவி பெறும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பிரதீப் குமார், சைக்கிள் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வருகிறார்.
You Might Also Like
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாத தலைமையின் கீழ் பயணிக்க முடியாது என அவர்…
3 Min Read
கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி இல்லை – உதயநிதி ஸ்டாலின்
தமிழக ஆளுநரின் உரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது என்றும், அதில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
1 Min Read
அமமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த நிர்வாகிகள்: திருத்தணியில் பரபரப்பு!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள், எஸ்.வேதாச்சலம் தலைமையில் ராஜினாமா செய்து, தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி: தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் நன்றி
சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் விஜய். மக்கள் அளித்துள்ள…
1 Min Read