தமிழக மக்கள் சார்பில், தொலைநோக்குத் திட்டத்தை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்ததற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொலைநோக்கு திட்டத்தின் மூலம் தமிழகம் கடல்சார் வர்த்தகத்தில் புதிய உச்சத்தை அடையும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.