MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்
விளையாட்டு

இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்

Admin
Last updated: June 23, 2026 2:43 pm
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வளித்து புதிய வீரர்களை மாற்றுவது, இந்திய அணித் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது கட்டாய ஓய்வு அளிக்க புதிய விதியைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி முடிந்து 6 நாட்களிலேயே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் தொடங்கின. சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இத்தொடர்களை வென்ற போதிலும், பிசிசிஐ-யின் தொடர்ச்சியான போட்டி அட்டவணை மற்றும் வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கும் கொள்கை குறித்து கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான போட்டிகளால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு, லக்னோ மற்றும் சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் போது மைதானங்கள் பாதியளவு காலியாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தனது கட்டுரையில் கவாஸ்கர் எழுதியதாவது: 'ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு பிசிசிஐ ஒரு மூத்த அண்ணன் போல உதவி செய்வதை வரவேற்கிறேன். ஆனால், நமது வீரர்களின் உடற்தகுதியும் முக்கியம். இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை என்பதால் வீரர்களை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது இந்திய அணித் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக உள்ளது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து, அவர்களுக்கு மாற்றாக விளையாடுவதால் மட்டும் ஒருவருக்கு இந்திய தொப்பி கிடைத்துவிடக் கூடாது. அதை அவர்கள் போராடிப் பெற வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கில், ராகுல் சதம் அடித்தனர். மானவ் சுதார் சிறப்பாக அறிமுகமானார். ஆனால், பும்ராவுக்கு ஏன் ஓய்வளித்தார்கள்? அவர் விளையாடி இருந்தால் தனது விக்கெட் எண்ணிக்கையை மேலும் அதிகரித்திருப்பார் அல்லவா? காயம் ஏற்பட்டால் தவிர, இந்திய அணி விளையாடும் போதெல்லாம் சிறந்த 11 வீரர்களுடனே களம் இறங்க வேண்டும். பணிச்சுமை காரணமாக வீரர்களுக்கு ஓய்வளிப்பதை தவிர்க்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், நமது முக்கிய வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது முழுமையான ஓய்வு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BCCICricketஇந்திய அணிகிரிக்கெட்சுனில் கவாஸ்கர்பிசிசிஐ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்
Next Article ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பினார்: குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனுதாரர்கள் அடையாள அட்டை கட்டாயம்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எச்சரிக்கை

மனுதாரர்கள் அடையாள அட்டை இணைப்பது கட்டாயம் என்ற அரசு விதியை திரும்பப் பெறாவிட்டால்…

June 24, 2026

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை மலையிலிருந்து தள்ளி கொன்ற பெண் கைது

திருமணம் செய்ய விருப்பமில்லை எனக்கூறிய வருங்கால கணவரை,…

June 24, 2026

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

You Might Also Like

விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்: 156 ரன்கள் முன்னிலை!

சைல்ஹெட்டில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 156 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் வலுவான நிலையில் உள்ளது. லிட்டன் தாஸ் சதம், பாபர் அசாம் அரைசதம்.

1 Min Read
விளையாட்டு

இந்தியா ஏ vs இலங்கை ஏ: இறுதிப் போட்டி ஒளிபரப்பு விவரங்கள்!

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. போட்டி ஒளிபரப்பு மற்றும் நேரலை விவரங்கள்.

1 Min Read
விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

இந்திய டி20 தொடருக்கு சிக்கல்: அயர்லாந்தில் அசாதாரண சூழல்

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகும் இந்தியா-அயர்லாந்து டி20 தொடர், வட அயர்லாந்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?