பிலிப்பைன்ஸின் மின்டானோ அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, இந்தோனேசியா, பலாவு, தைவான் மற்றும் பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர வெளியேற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், கடலோர மக்களுக்கு உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திடீர் நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த சுனாமி எச்சரிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.