புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 27 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அல்லது வேறு எந்த வகுப்புகளும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
முன்னதாக, மே 31 வரை கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஜூன் 1 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் ஜூன் 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் ஜூன் 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.