MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

Admin
Last updated: May 27, 2026 9:37 pm
Admin
Share
SHARE

புதுடெல்லி: மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள் பாடப்படுவதை உறுதிசெய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் தெளிவுரை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் விஜய் ஒரு விரிவான கடிதத்தை அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ​​இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது கடிதத்தில், 'சில அரசு விழாக்களின் போது தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான, மத்திய உள்துறை அமைச்சகத்தின் 28.01.2026 நாளிட்ட ஆணை எண்: 14/2/2025- Public குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தமிழக அரசும், தமிழக மக்களும் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு தமிழகம் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தமிழகத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 1891-ஆம் ஆண்டில் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு வாழ்த்துப் பாடலாகும். கடந்த பல்லாண்டுகளாக தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு, கல்வி, பண்பாடு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இப்பாடல் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழகத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு முறையாக அறிவித்துள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'மேற்சொன்ன உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தொடர்ந்து, வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைமுறையை மக்கள் மாளிகை பின்பற்றி வருகிறது. நாட்டுப்பண் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் இந்த வரிசைமுறை, மாநிலத்தில் நீண்டகாலமாக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக அமைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மொழிப் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலத்தின் வாழ்த்துப் பாடலாகத் தமிழகத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் மேற்படி ஆணையைத் தொடர்ந்து இந்த நடைமுறை சில குறிப்பிட்ட அரசு விழாக்களில் மாற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் மாநில வாழ்த்துப் பாடலை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடுவதற்கு யாதொரு தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் மக்கள் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய தெளிவுரை, உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணக்கமாக மாற்றுவதுடன், நிர்வாக ரீதியிலான குழப்பங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாகவும் அமையும். இவ்விவகாரத்தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்ய வேண்டும்' என்று கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறும் நிர்மலா சீதாராமனிடம் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Union Governmentதமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாடு அரசியல்பிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Next Article சென்னையில் 30ம் தேதி மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்

ஆன்லைன் மூலம் செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம், டெலிவரி நபர் தவறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து,…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க…

1 Min Read
இந்தியா

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்: சோகத்தில் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read
இந்தியா

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலம் 2-வது இடம்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்ற தேர்வுகளில், ஆன்-ஸ்கிரீன் மார்கிங் முறையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?