MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது

இந்தியா

ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது

Admin
Last updated: மே 26, 2026 1:31 மணி
Admin
Share
SHARE

ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52) என்ற பெண் குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹீரா குழும நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

ஹீரா குழுமம் தங்கம், ஜவுளி, கிரானைட், சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆலிமா விளம்பரப்படுத்தினார். முஸ்லிம்களின் ஷரியா சட்டப்படி வட்டி பெறுவது குற்றம் என்றும், ஆனால் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வட்டிக்கு பதிலாக ஆண்டுக்கு 36% ஈவுத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த கவர்ச்சிகரமான விளம்பர உத்தியால் ஈர்க்கப்பட்ட சுமார் 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஹீரா குழுமத்தில் ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை வழங்கப்படவில்லை. முதலீட்டாளர்கள் வழங்கிய பணத்தை தனது சொந்த கணக்குகளுக்கு மாற்றிய ஆலிமா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் பேரில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஆலிமா மீது, தெலங்கானாவின் வாரங்கல் காவல் நிலையத்தில் 2021-ல் தங்க முதலீடு மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த வாரங்கல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. மேலும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில், ஹரியானாவில் அவர் பதுங்கி இருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா மற்றும் ஹரியானா போலீசாருடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலிமாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகைதுமோசடிஷரியா சட்டம்ஹீரா குழுமம்ஹைதராபாத்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry1
Surprise1
Cry0
Wink0
Previous Article விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
Next Article தமிழகத்தில் எளிதாக ஆட்சிக்கு வரலாம் – பவன் கல்யாண் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

இந்தியா

முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு, மருத்துவத் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக குடியரசுத் தலைவர் திரவுபதி…

1 Min Read
இந்தியா

முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சோயா அல்லது பனீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள்…

1 Min Read
அரசியல்

பள்ளிகள் அருகே தொடர் சோதனை: போதைக்கு எதிராக ஆணையர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த பள்ளிகள், கல்லூரிகள் அருகே தொடர் சோதனை நடத்தவும், ரகசிய தகவல் வலைப்பின்னலை உருவாக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…

1 Min Read
ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பும் சோழர் கால சிலைகள்
இந்தியா

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பும் சோழர் கால சிலைகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து மூன்று பழமையான சோழர் காலச் சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் முக்கிய சாதனையாக இது கருதப்படுகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?