புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார். இதில் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.
இந்த முக்கிய விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு மொத்தம் 131 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு, மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய வாழ்நாள் பணிக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், டாக்டர் ஹண்டே அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார். மருத்துவத் துறையில் அவர் ஆற்றிய மகத்தான சேவைகளுக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.