MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரீல்ஸ் மோகத்தால் புல்லாவெளி அருவியில் ஆபத்தை தேடும் இளைஞர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - ரீல்ஸ் மோகத்தால் புல்லாவெளி அருவியில் ஆபத்தை தேடும் இளைஞர்கள்

அரசியல்

ரீல்ஸ் மோகத்தால் புல்லாவெளி அருவியில் ஆபத்தை தேடும் இளைஞர்கள்

Admin
Last updated: மே 25, 2026 6:06 மணி
Admin
Share
SHARE

பழநி: கொடைக்கானல் அருகே உள்ள புல்லாவெளி அருவியில், 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில் இளைஞர்கள் தடையை மீறி ஆபத்தான முறையில் குளித்து வருவதால் பெரும் அசம்பாவிதம் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த அருவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில அருவிகள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, ஆடலூர் மற்றும் பன்றிமலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரால் உருவாகிறது. இங்கு கொட்டும் நீர், திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. அருவியின் அழகை அதன் மேலிருந்து மட்டுமே ரசிக்க முடியும். பல நூறு அடி கீழே இறங்கினால் மட்டுமே அருவியில் குளிக்க முடியும் என்றாலும், ஆபத்து காரணமாக இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மரத் தொங்கு பாலமான 'ஆடு பாலம்' வழியாகவே அருவிக்கு செல்ல வேண்டும்.

தற்போது போதிய பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ள இந்தப் பாலம், இயற்கை அழகு நிறைந்த இப்பகுதிக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், இதுவரை 14 பேர் இங்கு தவறி விழுந்தும், நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, புல்லாவெளி அருவி, அஞ்சு வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகள் அனைத்தும் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள், தடையை மீறி அருவிக்குச் சென்று ஆபத்தை விலைக்கு வாங்குகின்றனர். மேலும், ஆபத்தான முறையில் புகைப்படங்களும் எடுக்கின்றனர். கோடை விடுமுறையைக் கொண்டாட வரும் இளைஞர்களின் இந்தச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி அருவியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் சாலை வசதி, படிக்கட்டுகள், உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் ரூ.3 கோடியில் நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடையாத நிலையில் தடையை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சுற்றுலா வழிகாட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Tourismகொடைக்கானல்சுற்றுலாப் பயணிகள்பாதுகாப்புபுல்லாவெளி அருவிரீல்ஸ் மோகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
Next Article கால்நடை மருத்துவ படிப்பு: விண்ணப்ப பதிவு தொடங்கியது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் புகார் மனுக்கள் இறுதித்…

1 Min Read
அரசியல்

4 தொகுதிகளிலும் பொது வேட்பாளர்: அன்புமணி எச்சரிக்கை

புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடைத்தேர்தல் வந்தால் தவெக வேட்பாளர்கள் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை…

1 Min Read
இந்தியா

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு…

1 Min Read
அரசியல்

பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா

பட்டாசுத் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ள வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அவர்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?