MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு
க்ரைம்

திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு

Admin
Last updated: May 24, 2026 5:05 pm
Admin
Share
SHARE

செய்யாறு அருகே, திருமணமான 6 மாதங்களிலேயே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமியார் அடித்துக் கொன்றதாக பெண் வீட்டார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி, பெண்ணின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கங்காவின் மகன் ஜீவானந்தத்திற்கும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புத்தலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அமிர்தலட்சுமியின் மகள் ஜீவலட்சுமிக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு, சில மாதங்களிலேயே கணவன், மனைவி மற்றும் குடும்பத்தினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், ஜீவலட்சுமியின் கணவர் ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், 'நீ மாற்று சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் தாய் வீட்டிற்குச் சென்று திருமண சீதனம் பெற்று வா' என்று கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் பேசி, வரதட்சணை விஷயத்தில் சுமுகமான சூழலை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ஜீவலட்சுமியின் தாய் அமிர்தலட்சுமிக்கு, ஆக்கூர் கிராமத்திலிருந்து தொலைபேசி மூலம், 'உங்கள் மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது' எனத் தகவல் வந்துள்ளது.

உடனடியாக ஆக்கூர் கிராமத்திற்கு விரைந்து சென்ற அமிர்தலட்சுமி மற்றும் உறவினர்கள், வீட்டில் ஜீவலட்சுமி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இது சந்தேக மரணம் எனப் புகார் அளித்து, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை, உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு, 'காரணமானவர்களைக் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாகியும் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உறவினர்கள் செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் ஜீவானந்தத்தைக் கைது செய்ததைக் காண்பித்த பிறகு, சாலை மறியல் கைவிடப்பட்டது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Newsசாலை மறியல்செய்யாறுதிருவண்ணாமலைபெண் மரணம்வரதட்சணை கொடுமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி
Next Article நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

க்ரைம்

வீட்டை வாடகைக்கு விட்டு மோசடி: ஐ.டி பெண் ஊழியர் கைது!

சென்னை: வீட்டின் உரிமையாளர் போல நடித்து, வேறு ஒருவரின் வீட்டை வாடகைக்கு விட்டு பண மோசடி செய்த வழக்கில், ஐ.டி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி லாரி கவிழ்ந்து விபத்து!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read
க்ரைம்

ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது

சென்னையில் நிலத்தகராறில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பொன்னம்மாளை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

2 Min Read
க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?