MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்

தமிழ்நாடு

3 கொலைகள்: காதலனுடன் சேர்ந்து மகளே செய்த கொடூரம் – பகீர் வாக்குமூலம்

Admin
Last updated: ஜூன் 26, 2026 2:10 மணி
Admin
Share
SHARE

பெங்களூரு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கொடூர தாக்குதலில் தாய், மகள் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் மகளே தனது காதலனுடன் சேர்ந்து ஈடுபட்டதாக வெளியான தகவல்கள் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளன. பயத்தில் தான் அனைவரையும் குத்தியதாக ஸ்வேதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (55) – முத்துலட்சுமி (48) தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வேதா (24). இவருக்கு ஸ்வேதா தவிர சுப்ரியா (20) என்ற மற்றொரு மகளும் உள்ளார். கடந்த 22ஆம் தேதி இரவு, ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பெற்றோர் மற்றும் தங்கை சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், ஸ்வேதா தனது காதலன் கென்னத்துடன் சேர்ந்து தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா ஆகியோரைக் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த தந்தை சோமசுந்தரத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, ஸ்வேதாவும் அவரது காதலன் கென்னத்தும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். தனிப்படை அமைத்து இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஸ்வேதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், 'எனது வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லை. மன அழுத்தத்தில் இருந்தபோது கென்னத்தை காதலித்தேன். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குத் தெரியாமல் காதலனுடன் வாடகை வீட்டில் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தேன். வீட்டிற்கு வந்த தாயைக் கொன்ற பிறகு, தங்கை சுப்ரியாவையும், பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தையையும் பயத்தில் குத்திவிட்டேன்' என்று ஸ்வேதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலைக்குப் பின் இருவரும் திருவண்ணாமலைக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கு பைக் பழுதானதால், ஸ்வேதாவை மட்டும் புதுச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டு கென்னத் தலைமறைவாகியுள்ளார். கென்னத்தை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். நேற்று இரவு புதுச்சேரி அண்ணா சாலைப் பகுதியில் பதுங்கியிருந்த கென்னத்தை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஸ்வேதா தனது வாக்குமூலத்தில் கென்னத் கொலை செய்யவில்லை என நாடகமாடிய நிலையில், தந்தை சோமசுந்தரம் மரண வாக்குமூலத்தில் 'கென்னத்தான் எங்களைக் கத்தியால் குத்தினார்' என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், கொலையில் கென்னத்தின் நேரடிப் பங்கு உறுதியாகியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime Newsகாதலர் ஜோடிகொலைதிருவண்ணாமலைபுதுச்சேரிபெங்களூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா நிறுவனத்தின் அடுத்த 5 மின்சார கார்கள்: குட்டி, பட்ஜெட், அதிக மைலேஜ்!
Next Article முதல்-அமைச்சர் விஜய்: போதைக்கு எதிராக இளைஞர்களுடன் ஓட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

தனிப்பட்ட வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர், 'எல் நினோ' நிலைமை 'சூப்பர் எல் நினோ'வாக மாறக்கூடும் என்றும், இது தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.…

1 Min Read
தமிழ்நாடு

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது: இசக்கி சுப்பையா ராஜினாமா

அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள…

1 Min Read
தமிழ்நாடு

மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலிலும் காணிக்கை திருட்டு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றார். இதையடுத்து இன்று…

0 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?