MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.100 தகராறில் கணவனை கொன்ற மனைவி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.100 தகராறில் கணவனை கொன்ற மனைவி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரூ.100 தகராறில் கணவனை கொன்ற மனைவி கைது

தமிழ்நாடு

ரூ.100 தகராறில் கணவனை கொன்ற மனைவி கைது

Admin
Last updated: ஜூலை 7, 2026 10:56 காலை
Admin
Share
கைது செய்யப்பட்ட பிரித்தி தேவி
கைது செய்யப்பட்ட பிரித்தி தேவி
SHARE

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த அவதேஷ் (49) மற்றும் அவரது மனைவி பிரித்தி தேவி (45) தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. அவதேஷ் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். நேற்று இரவு, 100 ரூபாய் பணம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது, பிரித்தி தேவியை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரித்தி தேவி, கணவர் அவதேஷ் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். நள்ளிரவில் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவதேஷ் உடல் முழுவதும் தீயில் எரிந்து கருகிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதலில் இது தற்கொலை என நாடகமாடப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெட்ரோல் பாட்டில் ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மனைவி பிரித்தி தேவி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெறும் 100 ரூபாய் பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவனையே மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Family DisputeHusband MurderWife Arrestஉத்தரப்பிரதேசம்கணவன் கொலைகுடும்ப தகராறுபதேபூர்மனைவி கைது
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை பெயர் மாற்ற அரசாணை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புதிய பெயர்: சமூக நீதித்துறை என மாற்றம்
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தோனியின் 45வது பிறந்தநாள்: ரயில்வே ஊழியரிலிருந்து கிரிக்கெட் ஜாம்பவான் வரை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட ஐடி ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள்

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

சர்வதேச பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: செப். 1 முதல் புதிய நடைமுறை

செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமான பயணிகளுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

டாஸ்மாக் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்…

ஆகஸ்ட் 23, 2026

பவன் கல்யாண் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பயணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வலது…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் விஜய் கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹3 உயர்வால் மக்கள் பாதிப்படைவார்கள் என முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்.

1 Min Read
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இண்டிகோ விமான நிறுவன பொறியாளர் அஜய் தாக்கூர்
தமிழ்நாடு

இண்டிகோ பொறியாளர் போதைப்பொருளுடன் கைது: லடாக்கில் பரபரப்பு

லே விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன பொறியாளர் அஜய் தாக்கூர், 2.27 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

விசாரணை துன்புறுத்தலுக்கு தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

விசாரணைக்கு அழைக்கப்படும் பொதுமக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. BNSS சட்டப்பிரிவு 179ன் கீழ் எழுத்துப்பூர்வ சம்மன் வழங்கவும், தேதி, நேரம் குறிப்பிடவும்…

1 Min Read
தமிழ்நாடு

சோழர் செப்பேடுகள்: தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஜோதிமணி வலியுறுத்தல்!

சோழர் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். இது தமிழ்நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?