MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!
இந்தியா

மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!

Admin
Last updated: May 17, 2026 8:00 pm
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், உத்தரப் பிரதேசத்தைப் போல் புல்டோசர் நடவடிக்கை தொடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக கட்டிடங்கள் இடிக்கப்படுவது பாஜக ஆளும் மாநிலங்களில் வாடிக்கையாகி வரும் நிலையில், தற்போது மேற்கு வங்கத்திலும் இதே கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.

நேற்று இரவு, கொல்கத்தாவின் பரபரப்பான ஹவுரா ரயில் நிலையத்திற்கு அருகே அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி, வியாபாரிகளின் கடைகள் உட்பட பல கட்டிடங்களை இரவோடு இரவாக புல்டோசர்களைக் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர். இந்த நடவடிக்கையின்போது, மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் படை மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த புல்டோசர் நடவடிக்கைகள் குறித்து, பாஜக தலைவர் திலீப் கோஷ் கோரக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாநிலம் முழுவதும் புல்டோசர் நடவடிக்கைகள் தொடரும். சட்டவிரோத கட்டுமானம் அல்லது ஆக்கிரமிப்பு எங்கு நடந்தாலும், அங்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும். அப்படி வெளியேறினால், அவர்களுக்கோ நமக்கோ எந்தச் சிரமமும் ஏற்படாது. எந்தச் சூழ்நிலையிலும் அரசு நில ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்படாது' என்று திட்டவட்டமாகக் கூறினார்.

முன்னதாக, மே 12 அன்று தில்ஜலா-டாப்ஸியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறி தோல் தொழிற்சாலை இயங்கி வந்த கட்டிடம் கொல்கத்தா மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. அருகில் இருந்த வீடுகளையும் இடிக்க அதிகாரிகள் முயன்றபோது, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கல்கத்தா உயர்நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தில்ஜலா-டாப்ஸியா பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:BulldozerKolkataWest Bengalகொல்கத்தாபுல்டோசர்மேற்கு வங்காளம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாகிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்: 156 ரன்கள் முன்னிலை!
Next Article தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: திரையுலகில் பெரும் சோகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்கத்தில் விநோதம்: பசுக்களின் பிறப்பு சான்றிதழ் கேட்ட பாஜக எம்.எல்.ஏ!

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ. பசுக்களின் பிறப்புச் சான்றிதழை கேட்ட சம்பவம் அரசியல்…

May 17, 2026

உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: ஆட்டோ மீது லாரி மோதி 3 பேர் பலி!

உத்தரபிரதேசத்தில் அதிவேக லாரி ஆட்டோ மீது மோதி…

May 17, 2026

டெல்லி தகிக்கும்! 45°C வரை உயரும் வெப்பநிலை – IMD எச்சரிக்கை!

டெல்லி மற்றும் வட இந்தியாவில் கடுமையான வெப்ப…

May 17, 2026

மேற்கு வங்கத்தில் புல்டோசர் ராஜ்ஜியம்: கொல்கத்தாவில் கட்டிடங்கள் இடிப்பு!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், உத்தரப்…

May 17, 2026

கோவில் ஊழியர் ஊதியம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் குறித்து…

May 17, 2026

You Might Also Like

இந்தியா

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில் பெரும் குழப்பம்! மணமகனை பார்த்ததும் மணமகள் அதிர்ச்சி, 'இவர் எனக்கு தெரியாது' என கூறியதால் மோதல்.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? முழு விவரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகாரில் தொடங்கிய இந்த விவகாரம், நாடு முழுவதும் பரவி பலரை கைது செய்ய…

2 Min Read
இந்தியா

தேசப் பிரிவினைக்கு சாவர்க்கரும் காரணம்: திக்விஜய் சிங் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாட்டின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னாவும் சாவர்க்கரும்தான் காரணம் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். வெளியான ஆடியோ பதிவு முக்கிய ஆதாரமாகியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?