தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் தலைமையிலான அரசை 'வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா?' என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
'திரு. விஜய் அவர்களே, உங்கள் அரசு வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா? தேர்தல் பிரச்சாரத்தின் போது 24 மணி நேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் கணக்கிலடங்காத மின்வெட்டால் தமிழக மக்களை அவதிக்குள்ளாக்குகிறீர்கள்!'
'மேலும், முதலில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, பின்னர் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே இலவசம் என நிபந்தனை விதித்தீர்கள். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவோம் என்றீர்கள், ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை!'
'மின்சாரத்துறை மின்வெட்டுத் துறையாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அதைக் கண்டுகொள்ளாமல் உங்கள் அமைச்சர் திரு. நிர்மல்குமார் அவர்கள் ரீல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், திருப்பரங்குன்றம் தீபத்தூணை இருளில் மூழ்கடிப்பது குறித்தும் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார்.'
'மொத்தத்தில், இது குதிரை வேக அரசாங்கம் அல்ல, போதாட்ட அரசாங்கம் என்பது தெளிவாகிறது. மக்களுக்கு இப்படி ஏமாற்றம் அளிப்பதை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுங்கள் முதல்வரே!' என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


