MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!

லைஃப் ஸ்டைல்

விஜய் 20 ஆண்டுகள் முதலமைச்சர் – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி!

Admin
Last updated: ஜூன் 14, 2026 7:22 காலை
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் கலந்துகொண்டார். இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன், முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர். அவர்களை அமைச்சர் என்.ஆனந்த் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், 'தவெக-வில் இணையும் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்குரிய பதவிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து உங்களுக்கு என்னென்ன பதவிகளைத் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். எந்தவொரு அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ தவறு செய்தால், அடுத்த வினாடியே பதவியில் நீக்கப்படுவார்கள். அதுதான் தமிழ்நாடு முதலமைச்சர். தொகுதியில் மக்கள் பிரச்சனைகளைக் கூறினால் உடனடியாகத் தீர்வு காணப்படும். உங்களுடன் எப்போதும் இருப்போம்' என்று உறுதியளித்தார். மேலும், 'நாம் அனைவரும் இணைந்து வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவோம்' என சபதம் ஏற்போம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

'இன்னும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக இருப்பார். இதனால், மற்றவர்களுக்கு ஒரே பயம். இப்படியே விட்டுவிட்டால் அவ்வளவு தான் போச்சு என்று நினைக்கிறார்கள். ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்களும் உங்கள் மாதிரி சாதாரண தொண்டன் தான். நாங்கள் பாகுபாடு பார்க்க மாட்டோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எங்களை அப்படித்தான் வழிநடத்துகிறார். மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறினால் அதற்கு தீர்வுக் காண தயாராக இருக்கிறோம்' என்றும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி, 'தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவும், நேர்மையான ஆட்சியைத் தரவும் தவெக செயல்படுகிறது. போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பை உயர்த்தவும் விஜய் சிறந்த தலைவராக விளங்குகிறார். இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தும் முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார்' என உறுதியாகத் தெரிவித்தார். நகைச்சுவை நடிகர் சீனிவாசன், 'தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்' என்றார். ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல், திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், மாற்றுப்பாதை தேவை என்றும் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsVIJAYஅமைச்சர் என். ஆனந்த்அரசியல்தமிழக வெற்றிக் கழகம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகரம்: 14 ஜூன் 2026 இன்றைய ராசிபலன்
Next Article காலையில் கீரை சாப்பிடலாமா? முக்கிய நன்மைகள் இதோ!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

ஜூலை 14, 2026

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன்…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

You Might Also Like

வீட்டு ஈக்களை விரட்டும் குறிப்புகள் பற்றிய தகவல்
லைஃப் ஸ்டைல்

வீட்டு ஈக்களை விரட்ட எளிய வீட்டு குறிப்புகள்!

வீட்டில் ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளதா? பழங்கள், இனிப்புகளை மூடி வைப்பது, குப்பைத்தொட்டியை தினமும் காலி செய்வது போன்ற எளிய குறிப்புகள் மூலம் ஈக்களை விரட்டலாம்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2200 கோடி வழங்கிய எலக்ட்ரிக்கல் நிறுவனம்

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 43 ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் மின்சாதன பொருட்கள் தயாரிக்கும் பணியில், புகழ்பெற்ற ஃபைபர் பாண்ட் எலக்ட்ரிக்கல் நிறுவனம் இயங்கிவந்துள்ளது. கடந்த 1982ஆம்…

1 Min Read
உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை
தமிழ்நாடு

கரூர் சம்பவம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. முதல்வர் விஜய் வருகை குறித்த சர்ச்சையும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?