MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!

தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!

Admin
Last updated: ஜூலை 3, 2026 1:40 மணி
Admin
Share
SHARE

முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டதாகவும், சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதால் கட்சி தனது வெற்றிப் பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றியதாகவும், ஆனால் 'மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு' என்பதை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். 'மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று' என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

மாணவப் பருவம் தொட்டு ரத்தமும் சதையுமாக இந்த இயக்கத்திற்காகப் பணியாற்றி, தற்போது விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணிப் பார்க்கையில், மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை என்றும், நேரம் வரும்போது இதுகுறித்து மேலும் பேசுவதாகவும் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 'புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல' இந்த இயக்கத்திற்காக ஆற்றிய பழைய நினைவுகளை என்ன செய்வது என்று தனக்கே தெரியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPoliticsஅதிமுகஅரசியல்வைகை செல்வன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஸ்டாலின் கண்டனம்!
Next Article கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க திட்டம்: அரசாணையை திரும்பப் பெற சி.பி.ஐ. வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள போலீஸ் அதிகாரிகள் சென்னை காவல் துறையினருடன் ஆலோசனை

1,500 வெடிகுண்டு மிரட்டல்: பொறியாளரைத் தேடி சென்னை வந்த கேரள போலீஸ்

கடந்த 3 ஆண்டுகளில் 1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய பொறியாளரைக்…

ஆகஸ்ட் 18, 2026

3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில்…

ஆகஸ்ட் 18, 2026

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகளுக்கு…

ஆகஸ்ட் 18, 2026

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

அரசாங்கம் சினிமா பார்த்துக் கொண்டு அழாது – பிரேமலதா விஜயகாந்த்

புதிய தமிழக அரசு அமைந்து 3 மாதங்களாகியும் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். அரிசி விலை…

1 Min Read
தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தேர்தல் வாக்குறுதிகளின்படி விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தொடர்முழக்க போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Min Read
அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு

அகஸ்தியர் அருவி: 10 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, அகஸ்தியர் அருவிக்கு நாளை முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா முடிந்த பின் அருவி திறக்கப்படும்.

1 Min Read
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
தமிழ்நாடு

சப்பாத்தி-புரோட்டா ஒப்பீடு: ஜெயலலிதா தலைமை குறித்து பூங்குன்றன் கருத்து!

ஜெயலலிதாவின் தனித்துவமான தலைமைப் பண்பை சப்பாத்தி-புரோட்டா ஒப்பீட்டின் மூலம் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் சுட்டிக்காட்டியுள்ளார். அதிமுகவில் நிலவும் தலைமைப் போட்டிச் சூழலில் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?