MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 15 நாட்களில் 25 கொலைகள்: முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – உதயநிதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 15 நாட்களில் 25 கொலைகள்: முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – உதயநிதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - 15 நாட்களில் 25 கொலைகள்: முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – உதயநிதி

அரசியல்

15 நாட்களில் 25 கொலைகள்: முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – உதயநிதி

Admin
Last updated: மே 25, 2026 5:56 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில் உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், 'மாற்றம், மாற்றம்' என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதற்கான சான்றுகளே இந்த சம்பவங்கள். கோவை சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். சூலூர் சிறுமியின் தாய்க்குத் தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் அவசரகதியில் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவமும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் சட்ட ஒழுங்கு சீர்குலைவின் உச்சகட்டத்தைக் காட்டுகிறது.

மேலும், முதல்வரின் சொந்தத் தொகுதியான பெரம்பலூரில் போதை கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, 'இது தமிழ்நாடா, உத்தரப் பிரதேசமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன்பு 'சிங்கப் பெண்' படை போன்ற வீர வசனங்களைப் பேசிய முதல்வர், தற்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார் என்றும் அவர் கேட்டுள்ளார். பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் நிலையில், காலை கண்துடைப்புக்காக காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை அரசு உணர வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்க முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், 'தவெகவினர் அதிகார வெறியாட்டம் பற்றி முதல்வர் விஜய் பேசுவாரா?' என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTN Law and Orderஉதயநிதி ஸ்டாலின்சட்டம் ஒழுங்குதமிழ்நாடு அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் நாளை மின்தடை: பாதிக்கும் பகுதிகள் முழு விவரம்
Next Article விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

லண்டன் புறப்பட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நிர்வாக சீரமைப்புக்கு குழு அமைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க குழுக்களை அமைத்து, தொண்டர்களுக்கு உற்சாக கடிதம் எழுதியுள்ளார்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

எடப்பாடி முடிவுகள் தவறு: தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகள் சேர்வது ஏன்? – அமைச்சர் அருண்ராஜ்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறு என்றும், இதனால் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாநிலங்களவை தேர்தல்: பாஜக 18 இடங்கள், காங்கிரஸ் அதிர்ச்சி

மாநிலங்களவை தேர்தலில் பாஜக 18 இடங்களை போட்டியின்றி வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

1 Min Read
அரசியல்

சி.வி.சண்முகத்தை விமர்சித்து அதிமுக தலைமை அலுவலகம் எதிரே பேனர் சர்ச்சை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் எதிரே, சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சித்து வைக்கப்பட்டிருந்த பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'குடிகார குள்ளநரி' போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?