MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - உலகம் - அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!

உலகம்

அதானி மீதான லஞ்ச வழக்கு: அமெரிக்கா கைவிடுகிறதா? ராகுல் காந்தி கண்டனம்!

Admin
Last updated: மே 15, 2026 4:53 மணி
Admin
Share
SHARE

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் கவுதம் அதானி மீது, சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2,450 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கடந்த 2024-ல் அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி குழுமம் நிதி திரட்டியபோது, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்ததாக அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை கவுதம் அதானி மறுத்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அதானி குழுமம் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரவும், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கவும், கவுதம் அதானி 6 மில்லியன் டாலர்களும், அவரது உறவினர் சாகர் 12 மில்லியன் டாலர்களும் செலுத்த மனு அளித்துள்ளனர். மேலும், வழக்கை முன்னெடுத்து செல்ல போதுமான ஆதாரங்கள் அரசு தரப்பிடம் இல்லை என்றும் அதானி குழுமம் தரப்பில் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதானி மீதான வழக்கை கைவிட்டால், அமெரிக்காவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவும், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தயாராக இருப்பதாக அதானி தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கை கைவிட அமெரிக்க நீதித்துறையின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சரணடைந்த பிரதமர் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் பேரம் பேசி அதானியை விடுவித்து உள்ளார்' என பதிவிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AdaniBribery CaseUSஅதானிஅமெரிக்காராகுல் காந்திலஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்சார கார் இனி மலிவு! கியா புதிய திட்டம் அறிமுகம்!
Next Article பரிமளா & கோ: ‘வாட்சா உடாதா’ பாடல் வெளியீடு! லைகா தயாரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

டிரம்ப் பேச்சு சர்ச்சை: பணவீக்கம் பிடிக்கும் என அதிபர் கருத்து

அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த சர்ச்சை வெடித்துள்ளது. 'எனக்கு பணவீக்கம் பிடிக்கும்' என அதிபர் டிரம்ப் கூறியதாகக் கூறப்படும் கருத்து, எரிசக்தி விலை உயர்வால் அவதிப்படும் மக்களிடையே கோபத்தை…

1 Min Read
உலகம்

ஹண்டா வைரஸ் பீதி: பிரான்சில் 11 பேருக்கு பாதிப்பு, தீவிர சிகிச்சை

எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரஸ், பிரான்சில் 11 பேரை பாதித்துள்ளது. இவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனம் தனிமைப்படுத்துதலை வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
உலகம்

ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்: பாகிஸ்தான் தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது. பாகிஸ்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

1 Min Read
உலகம்

ஜப்பான் அணு உலை மீண்டும் இயக்கம்: கழிவு சேமிப்பு அச்சம்

புகுஷிமா பேரழிவுக்குப் பிறகு மூடப்பட்ட ஜப்பான் அணு உலை மீண்டும் இயக்கம். அணுக்கழிவுகளை சேமிப்பது குறித்த புதிய அச்சங்கள் எழுந்துள்ளன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?