உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முழுமையாக நீங்குவதற்குள், தற்போது எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரஸ் மக்களிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சொகுசு கப்பலில் பயணம் செய்தவர்களிடையே இந்த வைரஸ் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது.
அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசு கப்பல், அமெரிக்கா, ஸ்பெயின், அன்டார்டிகா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றது. இந்த பயணத்தில் பங்கேற்ற பயணிகளிடையே ஹண்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் உட்பட மூன்று பேர் கப்பலிலேயே உயிரிழந்தனர். இதனால், கப்பல் கனாரி தீவு அருகே நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உலக சுகாதார நிறுவனம், கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து பயணிகளையும் 42 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 11 பேர் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்டு பாரிஸில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹண்டா வைரஸ் என்பது எலிகள் மற்றும் கொறித்துண்ணிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தீவிரமான நோயாகும். இதன் அறிகுறிகள் காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை. சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தான சுவாச நோய்க்கும் வழிவகுக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.