MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
தமிழ்நாடு

திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

Admin
Last updated: May 25, 2026 11:56 am
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று எதிர்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தது. கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், யானையால் வெளியேற முடியாமல் தத்தளித்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர், யானையின் உடல் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி யானையின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்தது சுமார் 45 வயதுடைய ஆண் யானை என்பதும், இது கேரள மாநில வனப்பகுதியில் இருந்து வந்த 'சில்லி கொம்பன்' என்றழைக்கப்படும் யானை என்பதும் தெரியவந்தது. இந்த யானை வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் இயல்பாக பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, யானையின் உடல் திருமூர்த்தி அணை அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பிறகு, வனவிலங்குகள் அடிக்கடி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கால்வாய் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், ரோந்து பணிகளை அதிகரிக்கவும், இதன் மூலம் வனவிலங்குகளை உயிருடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Elephant Deathஉடுமலைகாண்டூர் கால்வாய்திருப்பூர்யானைவனவிலங்குகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad1
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எபோலா பரவல்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு
Next Article மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: விஜய்யின் முடிவுக்கு காத்திருப்பு!

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவதற்கான அழைப்பு வந்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என த.வெ.க. தலைவர் விஜய்யே முடிவெடுப்பார் என கிரிஷ் சோடங்கர்…

2 Min Read
தமிழ்நாடு

22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! – வானிலை மையம்.

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி…

0 Min Read
தமிழ்நாடு

புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்பு: முதல்வர் விஜய் வாழ்த்து!

புதிய தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கினர். முதல்வர் விஜய் நேரில் சென்று வாழ்த்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?