தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சி நிர்வாகத் திறனற்ற டம்மி முதல்வர் மற்றும் ஜோக்கர் அமைச்சர்களால் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 42 TMC தண்ணீர் கூட இதுவரை வரவில்லை என்றும், ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும் முதலமைச்சர் வாயிலிருந்து ஒருமுறை கூட 'பாஜக' என்ற வார்த்தை வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகள் தான் அதிக ஏமாற்றங்களை சந்தித்து வருவதாகவும், 'விவசாயி' ஆக அடுத்த ஜென்மத்திற்காக காத்திருக்க தேவையில்லை, இந்த ஜென்மமே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 'ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்கிறார்' என்ற பழமொழியை குறிப்பிட்டு, தற்போதுள்ள முதல்வர், திமுக தலைவர் கொண்டுவந்த மெட்ரோ ரயிலில் சென்று ரீல்ஸ் எடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
பயிர் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அதிமுக அரசு மீறிவிட்டதாகவும், தற்போது வெறும் 35 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய முதல்வரால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆட்சியாளர்கள் பயந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அமைச்சரவை மொத்தமும் ஜோக்கர் கூட்டமாக இருப்பதாகவும், அமைச்சர்கள் கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதாகவும், இப்படி ஒரு அரசை இந்தியாவே கண்டதில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் சாடினார்.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் உறவினர்களும் ஆய்வுக்கு செல்வதாகவும், திமுக மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவதற்கு காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசை கேள்வி கேட்க துப்பில்லை என்றும், அதனால்தான் முதலமைச்சர் வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தையே வருவதில்லை என்றும் அவர் கூறினார். நேற்று டெல்லியில் போராடச் சென்ற விவசாயிகளை மகாராஷ்டிரா அரசின் காவல்துறை நாக்பூரில் வழிமறித்து தமிழ்நாட்டிற்கு திரும்பச் சொல்லிவிட்டதாகவும், ஆனால் இது குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை என்றும், ஏனென்றால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடக்கிறது என்றும், பாஜகவை எதிர்த்து பேச துப்பில்லை, திராணியில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
விவசாயிகளின் உரிமையை விட, முதல்வருக்கு தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சுயநலம் தான் முக்கியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகள் தான் அதிக ஏமாற்றங்களை சந்தித்து வருவதாகவும், 'விவசாயி' ஆக அடுத்த ஜென்மத்திற்காக காத்திருக்க தேவையில்லை, இந்த ஜென்மமே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
