தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரை கைது செய்வதற்காக, அவரது நீலாங்கரை இல்லத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்ற பணிகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதனை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த சூழலில், பகல் 12 மணி வரை உதயநிதி ஸ்டாலின் மீது எந்தவிதமான கைது நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவுறுத்தலானது, அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உதயநிதி ஸ்டாலின் தரப்புக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
