தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகர், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் கருப்பையா அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும், அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒன்றிணைந்து ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.
இதேபோல, துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரவிசங்கர், துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அரசின் தலைமை கொறடாவாக சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏ.வான சபரிநாதன், முதலமைச்சர் விஜய்யின் கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.