தூத்துக்குடி அருகே, பிளஸ்-2 மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற கொடூரக் காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் மாணவியை கடத்திச் சென்ற காதலன், காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
சம்பவத்தின் பின்னணி குறித்து மேலும் விசாரிக்கையில், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த காதலன் திட்டமிட்டதும், அதற்காக தனது நண்பர்களையும் அழைத்ததும் தெரியவந்துள்ளது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு விரைந்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவியை மீட்ட அப்பகுதி மக்கள், காதலனை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வியை எழுப்பியுள்ளது.