கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் தாமதத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் யாஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “இந்த படத்தை நிதானமாக, முழுமையாக முடித்து வெளியிட வேண்டும் என்ற முடிவை இப்போது எடுத்துள்ளோம். இது எனது ரசிகர்களுக்கோ அல்லது இந்திய பார்வையாளர்களுக்கோ பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் வருத்தமடைவார்கள், ஏனென்றால் ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால், அவர்களின் மனதில் ஒரு காலக்கெடு வந்துவிடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் படம் பற்றிய தகவல்கள் வெளியாகி விடுகின்றன. நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கியதில் இருந்தே எதிர்பார்ப்புகளும் தொடங்கிவிடுகின்றன,” என்று தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகளில், ஒரு படத்தை முழுமையாக முடித்த பிறகே அனைத்து விளம்பரங்களும் தொடங்குவதாகவும், ரசிகர்கள் படத்தை வாங்க விரும்புவதற்கு முன்பு அதைப் பார்க்க விரும்புவதாகவும் யாஷ் குறிப்பிட்டார். ஏனெனில், அங்கு மிகப்பரிய அளவில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் சவாலானவை என்றாலும், ரசிகர்களின் புரிதல் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார். அவர்களின் ஆதரவுடன் இந்தப் படத்தை சிறப்பாக வெளியிடுவோம் என நம்புவதாக யாஷ் தெரிவித்தார்.
‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது, யாஷ் மற்றும் பிற நட்சத்திரங்களின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த தாமதம் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விரைவில் முடிந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.